இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரு விலங்கு
5
தலைவி, எல்லா வித்தைகளுக்குமுரிய சக்தி கலைமகள் என்று போற்றுகிறோம். அந்தக் கலைமகள் பிரமனுடைய மனைவி. அவள் அவன் நாவில் இருக்கிறாள். வேத அறிவோடு கலை அறிவும் உடையவன் என்ற குறிப்பைத் தான் இந்த வரலாறு காட்டுகிறது. அறிவுச் செல்வத்தை உடையவன் பிரமன், ஆக்கும் திறத்தை அறிந்தவன். விதிக்கும் முறையை உணர்ந்தவன் என்ற இயல்புகளை அவனைப்பற்றிய வருணனைகள் நமக்கு விளக்குகின்றன;
சிவபெருமான் இரண்டையும் போக்குதல்
இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்களுக்குப் பிரமணிடத்தில் அச்சம் இராது. யமனிடத்திலும் அச்சம் இராது. பிரமனுக்கு வேலை கொடுப்பதும் அவர்களை வில் நின்று விடும்; யமனுக்கு வேலை கொடுப்பதும் நின்று விடும்; பரஞ்சோதியாக இருக்கும் கடவுள் இறப்பும் பிறப்புமாகிய துன்பங்களின்றும் அடியார்களைக் காப் பாற்றுகிறான் என்ற உண்மையைப் புராணக் கதைகள் வெவ்வேறு வகையில் சொல்கின்றன. சிவபெருமான் ஆருயிர்களுக்கு இறப்பையும், பிறப்பையும் போக்கு கிறவன். இந்த உண்மையையே அவனுடைய கையும் காலும் காட்டுகின்றன. சிவபெருமான் தன்னுடைய கையில் பிரம கபாலத்தை வைத்திருக்கிறான். பிரமன் நம்முடைய தலையில் எழுதுகிறான்; நமக்குப் பிறப்புத் துன்பத்தை உண்டாக்குகிறான். ஆனால் சிவபெருமான் அந்தப் பிரமனுடைய தலையையே திருப்பிக் கையில் வைத்திருக்கிறான். 'பிரமனால் வரும் துன்பம் இப்பெரு மானுடைய அடியார்களுக்கு இல்லை'
என்று சொல்வது போல அவன் கையில் அந்தக் கபாலம் விளங்குகிறது. கபாலியின் திருவருள் பெற்றவர்களுக்குப் பிரமனால் உண்டாகிற பிறப்புத் துன்பம் கிடையாது என்கிற உண்மையை அவனுடைய திருக்கரத்தைக் காண்கிறவர்