பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-உ.) இறையனார் அகப்பொருள் 119 மகட்பேச்சுரைத்தல் ‘நீரணி வேலி நெடுங்களத் தொன்னார் நிணம் அளைந்த போரணி வேல்மன்னன் கன்னியன் னாள் தன்னைப் பொன்னணிவா காரணி வார்முர சார்ப்பப் பிறருங் கருதிவந்தார் (ன் வாரணி பூங்கழல் அண்ணவென் ஆகி வலிக்கின்றதே.' (கசு எ) ' வேலைத் துளைத்தகண் எழை திறத் தின்று விண்ணுரிஞ்சும் சோலைச் சிலம்ப துணிவொன் றறிந்து சுடருமுத்த மாலைக் குடைமன்னன் வாள்நெடு மாறன் வண் கூடலின் வாய்க் காலைத் திருமனை முற்றத் தியம்புங் கடிமுரசே.' (கசு அ ) ' போர்மலி தெவ்வரைப் பூலத்தை வென்றான் புகாரனைய வார்மலி கொங்கை மடந்தையை வேறோர் மணங்கருதிக் கார்மலி வார்முர சார்ப்பப் பிறருங் கருதிவந்தார் ஏர்மலி தாரண்ணல் என்னோ இதன் திறத் தெண்ணுவதே.' (கசுசு) * வேயும் புரையுமென் தோளி திறத்தின்றை எல்லையுள் விண் தோயுஞ் சிலம்ப துணிவொன் றறிந்து தொன்னூற்புலவர் ஆயும் தமிழரி கேசரி கூடல் அகனகர்வாய் ஏயுந் திருமனை முற்றத் தியம்பும் எறிமுரசே.' (கஎ) இங்ஙனமுஞ் சொல்லும் : பொள்ளணிவுரைத்தல் 'குன்றொத்த யானைச்செங் கோல்நெடு மாறன் தென் கூடலன்ன மென்தொத் தணிகுழல் ஏழை திறத்து விளைவறிந்தே இன்றொத்த தொன்று துணி சிலம்பவின் றாயினெம்மூர் மன்றத்து நின்று முழங்குங்கொல் நாளை மணமுரசே.' (கஎக) ‘ நலம்புரி தெய்வமென் னாய்செய்வ தென்னறை யாற்றுவென்ற உலம்புரி தோள் மன்னன் தென்புனல் நாட்டொரு வற்கியைந்து குலம்புரி கோதையைக் காப்பணிந் தார்கொடி மாடமுன்றில் வலம்புரி யோடு முழங்குங்கொல் நாளை மணமுரசே.' (கஎஉ) இங்ஙனஞ் சொல்லப்பட்ட தலைமகன், 'என்னாற் செய்யப் பட்டது என்னோ ?' என்னும். எனத், தோழி, 'என்னை வினவற் பாலையல்லை, நீ இதற்குத் தக்கவாறு அறிந்து செயற்பாலை' என்னும் என்பது. ‘ நுண்ணறி வுடையோர் ஏலொடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.' என்பதாகலான், நீ ஒரு பொருளை விகற்பித்து அறியுந்துணை, யான் அறியுமாறில்லை பிற; அல்லதூஉம், யாம் குற்றேவன்