பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சூத்திரம்-கூ) இறையனார் அகப்பொருள் 75)

சூத்திரம் - 9


முன்னுற உணரினும் அவன்குறை உற்ற
பின்னர் அல்லது கிளவி தோன்றாது.

என்பது என்னு தலிற்றோ எனின்,
தலைமகன் முன் நின்று தோழி சொல்லாடுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :
முன்னுற உணரினும் என்பது - மதி யுடம்படுப்பக் கூட்டமுண்மை உணர்ந்தாளாயினும் என்றவாறு ;
அவன் குறையுற்ற பின்னர் அல்லது என்பது - அவன் இரந்து பின்னின்ற பின்ன ரல்லது என்றவாறு ;
அவன் இரந்து பின்னிற்குமாறு,

'குறையுறுங் கிழவளை உணர்ந்த தோழி.' (இறையனார்-கஉ)

என்னுஞ் சூத்திரத்துட் சொல்லுதும்;
கிளவி தோன்றாது என்பது - முடிப்பல் என்னுஞ் சொல் தோன்றாது என்றவாறு.
அஃதாமாறு,
மதியுடம்படுத்துத் தன் கருத்தறிவித்துப் பின்னைத் தழையும் கண்ணியும் கொண்டு பின்னிற்கும்.
நின்றா னொடு, முடிப்பக் கருதுவாள், தன்கண் நாணுக் கெடுந்துணையுங் குறியாடும்;
ஆட, அற்றைக்கன்று ஆற்றாமை அவற்குப் பெருகும்;
பெருகுவது கண்டு, அற்றைக்கன்று இவட்கு நாணுச் சுருங்க,
இரண்டும் துலாத் தலைப்பட்டு எடாநின்றன;
நின்றுழி, அவனது ஆற்றாமையும் இதனினூங்குப் பெருகுமாறில்லை யெனப் பெருக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது;
இவளது நாணும் இதனினூங்கு நுணுகுமாறில்லையென நுணுக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது.
நின்ற நிலைமைக்கண் தலைமகன் ஒரு சொற் சொல்லும்.
என் சொல்லுமோ எனின்,
இன்றினூங் கெல்லாம் இக் கருமம் நின்னான் முடியும் எனக் கருதிவந்து உழந்தேன்;
இனி நின்னான் முடியாமை உணரப்பட்டது;
பட்டமையான், இனி இளிவந்தன செய்தாயினும் முடிப்பல்,
இதனை இன்றியமையேனாகலான், என்னும்.
இளிவந்தன செய்தலாவது, மடலூர்ந்தானும் வரைபாய்ந்தானும் என்றவாறு;
அதற்குச் செய்யுள் :
மடலூர்தல்

' படலே றியமதில் மூன்றுடைப் பஞ்சவன் பாழிவென்ற
அடலே றயில் மன்னன் தெவ்வரைப் போல்மெலிந் தாடவர்கள்
கடலே றியகழி காமம் பெருகிற் கரும்பனையின்
மடலே றுவர் மற்றுஞ் செய்யா தனசெய்வர் மாநிலத்தே.' (79)