பக்கம்:இறைவர் திருமகன்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அவர்தம் போதனைகளை முடித்தபின் கீழே இறங்கி வந்த போது அவரைத் தொடர்ந்து ஏராளமாக மக்கள் பின்பற்றிச் சென்றார்கள். துன்பமுற்று அவரை நாடி வந்தவர்களின் துன்பத்தை அவர் துடைத்தருளினார்.

வேதநூல்களை எழுதிப் பேணி வந்தவர்களும், மதபோதகர்களுமாகிய பழமை விரும்பிகள், இயேசுநாதரின் செல்வாக்கு, மக்களிடையே வளர்வதைக் கண்டு வெறுப்பும் பொறாமையும் கொண்டனர். மோசஸ் முதலான இறையருள் பெற்ற முன்னறிவிப்போர்களின் நெறிமுறைகளைப் பின்பற்றி வந்த அந்தப் பழைமைவாதிகள் அப்பெரியோர்களே இயேசு நாதரின் வருகையை அறிவித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டனர். அவர்களில் சிலர் இயேசுநாதரைக் குற்றம் உடையவராக எடுத்துக் காட்ட வேண்டுமென எண்ணினர். அதற்காக கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் வந்து கலந்து கொண்டு நின்றனர். அவ்வப்போது, இயேசுநாதரைக் குதர்க்கமான கேள்விகள் கேட்டுச் சோதனைகள் செய்யத் தொடங்கினர்.