பக்கம்:இறைவர் திருமகன்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

"அடுத்தவனிடம் அன்பு கொள்; பகைவனை வெறு" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நான் கூறுவேன்: பகைவர்களிடமும் அன்பு காட்டுங்கள்; உங்களுக்குக் கேடு செய்தவர்களுக்காகவும் தொழுகை நடத்துங்கள். உங்கள் நல்ல செயல்களை மற்றவர்கள் கண்டு புகழும்படி வெளிப்படையாகச் செய்யாதீர்கள். நீங்கள் நோன்பிருந்தாலும், தொழுகை நடத்தினாலும் ஏழைகளுக்கு உதவி செய்தாலும் எல்லாவற்றையும் மறைவாகவே செய்யுங்கள். விண்ணுலகில் உள்ள தந்தையாகிய இறைவன் அவற்றைக் காண்பார்; உரிய பரிசைத் தருவார்."

இவ்வாறெல்லாம் இயேசுநாதர் உபதேசம் செய்தார். புத்துணர்ச்சிமிக்க இச்சொற்பொழிவுகளை மக்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் கேட்டார்கள். மோசஸ் பெருமானின் தூய நெறி முறைகளுக்கு அவர் கொடுத்த அழகான விளக்கங்கள் மக்கள் நெஞ்சைக் கவர்ந்தன. ஆனால், பழமை வாதிகள் தலையை அசைத்து தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தினர்.

கடினமான கேள்விகளைக் கேட்டனர்.

ஏசு.-3