பக்கம்:இறைவர் திருமகன்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சமுதாயத்தினால் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த வரிவசூலிக்கும் பாவிகளிடமும் இயேசு நாதர் அன்பாகப் பழகினார். நரகத்திலே இடம்பிடிக்க வேண்டிய அந்தப் பாவிகளும் சொர்க்கத்தை அடைய மார்க்கமுண்டு என்று இயேசுநாதர் கூறியது அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. தாங்கள் செய்த பாவங்களுக்காக வருந்தி ஆண்டவனிடம் மன்னிப்புப் பெற்று நல்வாழ்க்கை வாழத் தொடங்கினால் அவர்கள் இன்ப உலகம் பெறலாம் என்று கூறிய இயேசு நாதரை அவர்கள் போற்றினார்கள். தங்கள் வீடுகளுக்கு வரவேற்று விருந்தளித்தார்கள்.

“பாவிகளுடனும் வரிவசூலிப்பவர்களுடனும் இவர் ஏன் ஒன்றாக இருந்து சாப்பிட வேண்டும்?" என்று பழைய மதவாதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

"நேர்மையானவர்களை அழைப்பதற்காக நான வரவில்லை; பாவிகளைத் திருந்தி வாழச் செய்வதற்காகவே நான் வந்திருக்கிறேன். கூட்டங் கூட்டமாகவரும் நல்லவர்களைக் காட்டிலும், திருந்திவரும் ஒரு பாவியைத் தான் விண்ணுலகம் மிகுந்த களிப்புடன் வரவேற்கக் காத்