இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆலயத்தினுள் இயேசுநாதர் போதனை புரிந்து கொண்டிருந்தார். அப்போது பெரிய குருமார்களும் முதிய பெரியோர்களும் அவரிடம் வந்தனர்.
“எந்த அதிகாரத்தின் பேரில் நீர் இச் செயல்களைச் செய்து வருகிறீர் ! உமக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர் யார்?” என்று கேட்டார்கள்.
"நான் உங்களை ஒன்று கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். அதன் பின் நான் எந்த அதிகாரத்தின் பேரில் இச் செயல்களைச் செய்து வருகிறேன் என்பதைக் கூறுகிறேன்" என்று பதிலளித்தார் இயேசு நாதர்.
"ஜான் திருமுழுக்காட்டும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? விண்ணுலகிலிருந்தா?