பக்கம்:இறைவர் திருமகன்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

என்றா நினைக்கிறாய்? ஆனால், எழுதிவைத்திருப்பதெல்லாம் நிறைவேறுவது எப்படி?" என்று கூறினார்.

பிறகு அவர் தன்னைப் பிடித்துப் போகவந்தவர்களை நோக்கி, வாளும் வேலும் தூக்கிக் கொண்டு, ஒரு திருடனைப் பிடிக்கவந்தது போலவா நீங்கள் என்னைப் பிடிக்க வர வேண்டும்? நாள்தோறும் கோயிலில் வந்திருந்தேனே அப்போது பிடிக்கவில்லையே! என்று கேட்டார்.

அவர்களோ, இயேசு நாதரைப் பிடித்துக் கயிற்றினால் கட்டி இழுத்துக் கொண்டு சென்றார்கள். தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று பயந்த சீடர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள்.

பீட்டர் மட்டும், சிறிது தொலை பின்னால் இருந்தபடியே, அந்தப் போர்வீரர் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றான்.

இயேசு நாதர் பெரிய குருவின் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆலயக் குருமார் பலர் இருந்தார்கள். அவர்கள் யாவரும் சேர்ந்து இயேசு நாதரைக் குற்றஞ் சாட்டிப் பல கேள்விகள் கேட்டுக்