இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
413
உரை
இச்சுவாமிநாதத்திற்கு விரிவுரை ஒன்றுளது. அது, நூலில் முதல் 14 நூற்பாக்களுக்கே உள்ளது; விரிவுரையே. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பொழிலின் வழியே மேலும் சில நூற்பாக்களுக்கும் உரை கிடைத்துள்ளது. ஐந்ததிகாரங்களுக்கும் உரை இருந்திருக்கக் கூடும் என்பதற்குச் சான்றுண்மை கூறுவர். இவ்வுரை இயற்றியவர் பெயர் முதலியன தெரிந்தில.
பதிப்பு
சுவாமிநாதம் தனி நூலாகவும், சுவாமிநாதம் மூலமும் விருத்தியுரையும் தனி நூலாகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள. முன்னதற்குப் பதிப்பாசிரியரும் உரையாசிரியரும், பின்னதற்குப் பதிப்பாசிரியரும் அறிஞர் செ. வை. சண்முகம் ஆவர். முன்னது வெளி வந்த ஆண்டு 1975 பின்னது வெளிவந்த ஆண்டு 1976.
தமிழ்ப் பொழிலில் சில பகுதிகளை வெளியிட்டவர் இ. கோவிந்தசாமிப்பிள்ளை. ஆண்டு 1924.