பக்கம்:இலக்கியக் கலை.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்கலைகளும் கவிதையும் #37 அவனுடைய மனம், அறிவு, சித்தம் முதலியவற்றிற்கு ஏற்பவே அவனது அநுபவமும் அமைகிறது. அவ்வநுபவம் கலையாக ஆக்கப் படும் பொழுது இயற்கை அங்கில்லை. அதற்குப் பதிலாகத் தனிப்பட்ட இவன் மனத்தில் அது எக்காட்சியை வழங்கிற்றோ அக்காட்சியே கலையாக வருகிறது. எனவே, இவன் அங்கும் தன்னை ஏற்றிக் காண்கிறானே தவிர, அதன் உண்மையை அப்படியே காண்பதில்லை. கலை முகிழ்க்க இயற்கை துணை செய்வதாயினும் இயற்கையின் நகலன்று கலை. உதாரணமாக ஒன்று காண்போம். காலைக்கதிரவனின் தோற்றத்தை ஒருவன் நிழற்படம். எடுக்கிறான்; மற்றொருவன் வண்ணத்தில் ஒவியமாகத் தீட்டுகிறான். மூன்றாமவன் இவ்வழகிய காட்சியைக் கவிதையாக இயற்றுகிறான். இம்மூவருள் ஒவியனும், கவிஞனும் கலைஞர் என்று கூறப்பெறுவர்; ஆனால் நிழற்படம் எடுப்பவன் கலைஞனாகக் கருதப்படுவதில்லை. நிழற்படம் எடுப்பவன் இயற்கைக்கு நகல் தயாரிக்கிறான். அவ்வியற்கைக் காட்சி அவன் மனத்தில் என்ன உணர்வை, அநுபவத்தை உண்ட்ாக்கிற்றென்று அவனும் கவலைப்படவில்லை; நமக்கு அறிவிக்கவும்.இல்லை. ஆனால் பின்னர்க்கூறிய இருவரும் அவ்வாறு அல்லர். சூரிய உதயம் எவ்வாறு இருந்தது என்றுமட்டும் அவர்கள் ஒவியமும் கவிதையும் நமக்குக் கூறவில்லை. அதற்குமேலும் அக்காட்சி அவ்விருவர் மனத்திலும் எத்தகைய உணர்ச்சியை, அநுபவத்தைத் தோற்றுவித்தது என்பதையே அவர்கள் தம்முடைய கலைமூலம் வெளிப்படுத்துகின்றனர். ஆகலின் கலை இயற்கையின் பிரதி என்று கூறுவது பொருந்தாக் கூற்றே. கலையநுபவத்தில் சுதந்திரம் உலகில்டயே காணப்படும் எல்லாப் பொருள்களும் நமது. பொறி உணர்வினாலேய்ே அறியப்படுகின்றன. அவ்வாறாயின் கலையிலும், கலைஞனிலும் எவ்வளவு பொறி உணர்வு கலந்துள்ளது என்பதைக் காணல்வேண்டும். கலையை நாம் அநுபவிப்பதிற்குப் பொறிகளின் (கண், கை முதலாயின. உதவி ஒரளவு தேவையாக இருப்பினும், அதன் முழுப்பயனும் அறியப் படுகிற இடம் மனமேயாகும். மனம் என்பது உணர்ச்சிகளின் இருப்பிடம். ஆகவே ஆன்ம ஒருமைப். பாட்டோடு க்லந்து அநுபவித்தல்ே கலைகளை நன்கு அதுபவிக்கும் முறையாகும். பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்ற ஆசையே அநுபவத் "இ.-22 . - - -- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/358&oldid=751188" இலிருந்து மீள்விக்கப்பட்டது