பக்கம்:இலக்கியக் கலை.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்கலைகளும் கவிதையும் 339 பயன் கருதாமல் செய்யப்படுகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறந்த நுண்கலைகளாகத் திகழும். இக்கலைகளைக் கூறுமிடத்து 'ஆக்கப்படுதல் என்று கூறுதலே பொருத்த முடையது. நுண்கலையுள் வேறுபாடு இந் நுண்கலைகள் ஆக்கப்படும் முறையில் ஓர் அளவு வரை முற்கூடிய ஆராய்ச்சியும், வன்மையும். ஒழுங்குமுறையும் தேவை. இந்த அள்வுவரை அவை ஏட்டில் எழுதப்படும் சட்டதிட்டங் களாகும். இதன் பின்னர்க் கலைஞனுக்குப் பூரண சுதந்தரம் கிடைக்கிறது. அவனது கற்பனையின் திறத்திற்கு ஏற்பக் கலை உயர்வடைகிறது. உதாரணமாக, ஓர் இராகத்தின் ஆரோகண' அவரோகண சுரங்கள் எழுதிக்கூடக் காட்டப்படலாம். அந்த ராகத்தின் சஞ்சார எல்லை', 'மூர்ச்சனை முதலியவைகளும் சட்டதிட்டங்களாக வகுக்கப்படலாம். ஆனால் இவ்வளவில் இசைக் கலை நிற்பதானால் ஒருவரைச் சிறந்த இசைவல்லுநர் என்று கூறவேண்டாம். அனைவருமே இசைக்கலை வாணர்களாக ஆகிவிடலாம். ஆனால் இந்த எல்லைகளுள் நின்று கலைஞன் தன் கற்பனையைப் பயன்படுத்துகிறான். கற்பனையின் விரிவிற்கு ஏற்பக் கலை பரிமளிக்கிறது. - வடிவும் உள்ளிடும் - ஆராய்ச்சி செய்வதன் நிமித்தம் இந் நுண்கலைகளை வடிவு "உள்ளீடு என்று பிரித்துக்கொள்ளலாம். இப்பகுப்பு நலஞ்செய்வதுபோல் தோன்றினாலும் அதிகமாக இதனைப் பயன்படுத்தல் இயலாது. ஒவியம், சிற்பம் என்ற இரண்டிலும் இங்ங்ண்ம் பிரித்துக் காணலாம். ஒவிய நூலில் கூறப்படும் நிறக்கூடல் அளவு தவறாமல் நிறங்களைக் குழைத்து ஒரு சித்திரம் வரையப்படலாம். வரையப்பட்ட பொருளின் அளவு, பரிமாணம் மு. த லிய ை வ ஒழுங்குபட அமைந்திருக்கலாம். என்றாலும் என்ன? அச்சித்திரம் உயிரற்றதாகவே இருந்து விடலாம், நிறக்கூட்டலும், அள்வு முதலியனவும் அக்கலையின் புறப்பகுதியாகும். இப்பகுதி நன்கு அமைந்துவிட்டால் மட்டும் கலை முற்றுப் பெற்றுவிடாது. கலையின் அகப்பகுதி ஒன்று உண்டல்லவா? உணர்ச்சி ஊட்டுவதே அகப்பகுதியாகும். அஃதின்றேல் பயனில்லை. ஆனால் இவ்வேற்றும்ை இசை கவிதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/360&oldid=751191" இலிருந்து மீள்விக்கப்பட்டது