பக்கம்:இலக்கியக் கேணி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ்

ஆசிரியர்: இப்பிள்ளைத் தமிழின் ஆசிரியர் பகழிக் கூத்தர். இவர் தந்தை தர்ப்பாதனர். செம்பி நாட்டுச் சன்னுசிக் கிராமத்தவர். சன்னசிக்கிராமம் என்பது சேது சமஸ்தானத்தைச் சார்ந்த ஒர் ஊர். இவர் வைணவ மரபினர். இதனை இந்நூல் சிறப்புப் பாயிரச் செய்யுளால் அறியலாம். அப்பாடல் வருமாறு:

செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழும் கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான்-அந்தேர் திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகற் கன்பு - தருமால் பகழிக்கூத் தன்.

நூல்பாடிய வரலாறு: புகழிக் கூத்தர் ஒரு சமயம் வயிற்று நோயால் பெரிதும் வருந்தினர்; மந்திரம் மருந்து ஆகிய எவற்ருலும் நோய் நீங்கவில்லை; திருச்செந்துரை அடைந்தார்; செந்திப்பதிபுரக்கும் செவ்வேள்மேல் இப் பிள்ளைத் திமிழைப் பாடினர்; நோய் நீங்கியது.

நூல் அர்ங்கேற்றம்: இந்நூல் செந்தில் வேலவர் சங் நிதியில் அரங்கேற்றப் பெற்றது. அவையினர் இங் நூலேக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி எய்தினர்; பிள்ளைத் தமிழின் சொல் நயம் பொருள் நயங்களைக் கேட்டு வியந்த னர்: பற்பல சந்தங்கள் கொண்ட பாடல்களைக் கேட்டு விம்மிதம் எய்தினர். எனினும் இப்புலவர் பெருமான் மரியாதை செய்யப் பெறவில்லை ! புலவர் இதனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/38&oldid=676733" இலிருந்து மீள்விக்கப்பட்டது