50 இலக்கியக்கேணி
(பொருளாறு நாலும்-ஆறு அங்கங்களும், நான்கு வேதங்களும் : பதியான-பதியில் உதித்த ஞான முனிவன்-திருஞான சம்பந்தர் : அத்தர்-தந்தை பியல்தோள் : பனுவல்-பதிகம் : நடுவிருள் ஆடும் எங்தைசிவபெருமான் உள்க-கினைத்தால்.)
திருவேதிகுடியில்
திருஞானசம்பந்தர் (ஐந்தாவது தலயாத்திரையில்) காவிரி யாற்றின் வடகரையிலே மேற்கு நோக்கிச் சென்ருர் : திருவையாறு முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டே திருருளு*வரையில் சென்று, பின்னர்க் காவிரியின் தென் கரையிலுள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டே திரும்பித் திருக்கண்டியூர் திருச்சோற்றுத் துறை முதலிய தலங்களைத் தரிசித்துப் பாடிப் பரவி, வேதியர் வாழும் திருவேதிகுடியை அடைந்தார்; அங்குப் பாடிய பதிகத்தில் பதினேராவது பாடலில் திருவேதி குடியிலுள்ள சிவபெருமானுடைய திருவடிகளைச் சிங்தை செய்ய வல்லவர்கள் நல்லவர்கள் என்று கருதப் பெறுவார்கள்: அம்மையில் தேவருலகெய்தி அரசாள்வர்: அது உண்மை : “ ஆணை நமது ' என்று குறித்தார். அப்பாடல் வருமாறு :
கக்கம்மலி தண்பொழில்நல் மாட மிடை
காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலேகொடு
வேதிகுடி ஆதிகழலே
- பவானி என்ற தலம்.