பக்கம்:இலக்கியக் கேணி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பிரியாதிருக்க

ஆசிரியர்

செவ்வேளுக்குரியதாகிய 18ஆம் பரிபாடலின் ஆசி ரியர் குன்றம்பூதனர். ' குறிஞ்சித்திணைக்குரிய முதல், கரு, உரியென்ற முப்பொருள்களையும் செவ்வனே அமைத்து நயமுறக் கூறியிருத்தலை உற்றுநோக்கும் பொழுது, இவர் அகத்திணையைப் பாடுதலில் வல்லவர் என்று தெரிகிறது......... குன்றத்தை அழகுறப் பாடி யிருத்தலால் இவர் இப்பெயர் பெற்ருர் போலும்' (டாடர் ஐயர் அவர்கள்).

மஞ்ஞை நோக்கிய கானவன்

திருப்பரங்குன்றத்தில் ஒரு கானவன் ஒரு மயிலே நோக்கினன்; அதன் அழகையும் களிப்பினையும் தன் உள்ளத்தே கொண்டு நின்ருன். அவன் காதலி அவனை நோக்கினுள்; நீ என்னை நோக்காமல் மயிலைப் பார்ப்ப தின் காரணம் என்ன ? இச் செயலால் நீ என்னை இகழ் கின்ருய் ' என்று கூறி ஊடினுள். அவன்அவளுடைய ஊடலை மாற்றின்ை ; ' என் அன்பே அந்த மயில் உன் சாயலைக் களவு கொள்ள எண்ணியது ; ஆனால் உன் சாயலைப் பெற முடியாமல் வருத்த முற்றது; இங்ங்னம் வருந்தும் இம்மயிலேக்கண்டு, நின் சாயலின் அருமையை நினைத்து கின்றேன்; ஆனால் நீயோ உன்னை நான் இகழ்ந்ததாக எண்ணுகிருய்” என்று தெளிவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/71&oldid=676766" இலிருந்து மீள்விக்கப்பட்டது