பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 புலவர் கா. கோவிந்தன்



குடிப்பிறப்பே உரவோர்க்கு அழகு எனக் குடிப் பிறந்தார்க்கும் உரைத்த அறவுரைகள் அறிந்து பாராட்டற்குரியனவாம்.

சேரனும், சோழனும், பாண்டியர் குடியோடு பகை உடையவர். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், ஒரு காலத்தே தாம் பற்றி ஆண்டிருந்த ஒல்லையூர் நாட்டை மீளவும் கைப்பற்றிக் கொண்டதால், சோழர் அவன் மீது பகை கொண்டனர். பூதப் பாண்டியன் படைக்கு ஆற்றாது தோற்ற சோழர், சேரர் துணையை வேண்டினர். இருவர் படையும் ஒன்று கூடின. தொடங்கிய வினையை இடையில் மடங்காது முடிக்கவல்ல பெரும்படை உடைய சேரரும், சோழரும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து எழுந்துவிட்டனர். அஃதறிந்த ஒல்லையூர் தந்தானும், அவர்மீது சென்றான். செல்லுமுன் அவன் உரைத்த வஞ்சினம் அவன் பெருமையினை உணர்த்துவதோடு ஒல்லையூர் தந்தான் நல்லறம் உரைக்கும் நல்ல ஆசானுமாவான் என்ற உண்மையினையும் உணர்த்துவதாகும்.

“என்னோடு போரிட வருவோர் யாவரேயா யினும் அவரைப் போர்க்களத்தே அலற அலறத் தாக்கி அழித்துத் தம் தேர்ப்படைகளோடு தாமும் தோற்று ஓடி ஒளியச் செய்வேன்; இஃது உறுதி. அவ்வாறு செய்யேனாயின், என் அரியணையில் என்னோடு அமர்ந்திருக்கும் அழகே உருவென வந்த என் மனைவியை விட்டுப் பிரிந்து, மனையாளைத் துறந்த