பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 31



உள்ளத்தவராதல் வேண்டும்; அது தன் ஆட்சிக்குப் பெருந்துணையாம் என எண்ணினான். எண்ணிய தோடு நின்றானல்லன்; அவர்க்கு அறம் பல உரைத்தற்கு ஆவன மேற்கொண்டான்; அறம் உரைக்கும் அப்பணியினை அறிவுடை நம்பி, பிறர்பால் ஒப்படைத்தானல்லன். அதைத் தானே மேற் கொண்டான். அவ்வாறு அவன் உரைத்த அறங்கள் அளவிறந்தனவாம். அவை இலக்கியத்தில் இடம் பெற்றுச் சிறப்புடன் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று, மக்கள் பேற்றின் மாண்புபற்றி அவன் உரைத்ததாகும்.

மக்கட் பேற்றின் மாண்பினை உணர்ந்தவர் பழங்கால மக்கள். கருத்தறிந்த கணவனும், மனையற மாட்சிமிக்க மனைவியும் கூடி நடாத்தும் இல்லறத்திற்கு நல்ல அணிகலனாய் அமைந்து, அழகு தருவது நன்மக்கட் பேறே என்றார் ஆன்றோர் ஒருவர். அறிவறிந்த மக்கட்பேறல்லாது, பொருள், புகழ் முதலாம் பிற பேறுகள் உண்மைப் பேறுகள் ஆகா. ஆகவே தன் பொருள் என்று, தாம் பெற்ற மக்களையே மதிப்பர் மாண்புடையோர். மக்களைப் பெறாத வாழ்வு மாண்புடைய வாழ்வாகாது; மக்கள்தம் மழலை மொழி கேட்டு மகிழாதார் மக்கட் பண்புடையராகார். கொடுவாள் பிடித்துக் கொலைத் தொழில் மேற்கொண்ட கொடியோனையும் குழைவிக்கும் ஆற்றல் குழந்தைகட்கு உண்டு. அவர் அன்பு முகம் கண்டு மகிழாதார், அவர் அழுகுரல் கேட்டு உள்ளம் அசையாதார் உலகத்தில் இலர் பற்றறத் துறந்த