பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 புலவர் கா. கோவிந்தன்



இவ்வாறு, வெற்றி குறித்தும், வாணிகம் கருதியும் கடல் கடந்து செல்லுங்கால் இடைவழியில் கலம் சில கவிழ்ந்து போதலும், அவற்றில் சென்ற மக்கள் ஆண்டே ஆழ்ந்து அழிந்து போதலும் உண்டு. கடலிடையே கலம் கவிழ்ந்த காட்சிகளைத் தம் பாட்டிடை வைத்துப் பாராட்டிய புலவர்களும் உளர்.

அத்தகைய கடற்செலவு ஒன்றில், கலங் கவிழ, அழிந்துபோன அரசருள் இவ்வழுதியும் ஒருவனாவன். ஆதன், இரும்பொறை, குட்டுவன் எனும் பெயர்கள் சேரரைக் குறிக்கவும், கிள்ளி, சென்னி, வளவன் எனும் பெயர்கள் சோழரைக் குறிக்கவும் வழங்குவதேபோல், செழியன், மாறன், வழுதி எனும் பெயர்கள் பாண்டியரைக் குறிக்க வழங்கும். ஆகவே, வழுதி எனும் பெயருடைய இவன், பாண்டியர் குடியில் பிறந்தவனாவன் எனத் தெரிகிறது. பாண்டியர் குடியிற்பிறந்து, கடலில் கலங் கவிழ மாண்டு மறைந்து போனமையால், "கடலுள் மாய்ந்த வழுதி" என அழைக்கப் பெற்ற இவன், இளமைக் காலத்திலேயே கற்பன எல்லாம் கற்றுக் கல்விக் கருவூலமாய், பேரருள் பெற்ற பெரியார்களும் பாராட்டத் தக்க அறிவுக் களஞ்சியமாய் விளங்கினமையால், அக்கால மக்கள், அவன் ஆண்டின் இளமையும், அறிவின் பெருமையும் ஒருங்கே தோன்றுமாறு கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி எனப் பெயரிட்டு அழைத்தனர்.

பண்டு, கண்ணிற் கண்ட உயிர்களைக் கொன்று தின்னும் கொடுமையே நிறைந்த மக்களைக்