பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 புலவர் கா. கோவிந்தன்



அவன்பால் பொறாமை கொண்டு, தம் நாடுகட்கு இடையிடை இருந்து அரசோச்சி வந்த பல சிற்றரசர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு, ஒன்று கூடிச் சென்று, போரிட்டு அச்சிறந்தானை அழிப்பதும், ஆற்றல் மிக்க அரசன், தன்போலும் வேந்தர்கள், தன் ஆண்மையை அறிந்து மதித்தற் பொருட்டு வென்று அடக்குவதும், இவ்வாறு, ஒரு குடியிற் பிறந்த ஓர் அரசன், ஏனைய குடிகளைச் சார்ந்த அரசர்களை அழிப்பதோடு அமைதி கொள்ளாது, ஒரு குடியிற் பிறந்தவர்களே, தம்முள் பகைகொண்டு போரிடுவதும், ஒரு வயிற்றில் பிறந்தவர்களே பகை கொண்டு போரிட்டு ஒருவரையொருவர் அழிப்பதும், மகன் தந்தைமீதே படை கொண்டு போவதும் அக்கால நிகழ்ச்சிகளாம்.

அக்கால வழக்கத்திற் சிறிதும் தவறாதார் போலவே சேரமான் கணைக்கால் இரும்பொறையும், செங்கணானும் பகை கொண்டனர். கணைக்கால் இரும்பொறைக்குக் கழுமலம் என்ற இடத்தில் காவல் மிக்க கோட்டை ஒன்றிருந்தது. யானைப் படை மிக்க அக்கோட்டையினை, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலாம் படைத் தலைவர்கள் காத்து நின்றனர். கணைக்கால் இரும்பொறையின் வெற்றிச் சிறப்பிற் கெல்லாம் கழுமலக் கோட்டையே காரணமாம் என்பது உணர்ந்த செங்கணான், பெரும் படையோடு சென்று, அக்கோட்டையைத் தாக்கினான். சோழர் படைக்குப் பழையன் என்பான் தலைமை