பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 புலவர் கா. கோவிந்தன்



உண்ணும் நீரை யானே இரந்து வேண்டினேன். அவர் அரசன் என்ற மதிப்புத்தானுமின்றி, இகழ்ந்தளித்த தண்ணிர் இதோ! இதை உண்டு உயிர் வாழ்வதோ உயர்வு ?” என்றெல்லாம் எண்ணி, இறுதியில் உண்ணாது உயிர் துறப்பதே நன்று என அவன் துணிந்தான்.

மானத்தின் மாண்புணர்ந்த அவன் உள்ளத்தி னின்றும் பிறந்தது ஓர் அறவுரை இறக்கத் துணிந்த அவன், தான் அனுபவித்தறிந்த அவ்வறவுரையினை, உலக மக்கள் அனைவரும் அறிந்து பயன் கொள்ளுதல் வேண்டும் என எண்ணினான். உடனே, அவ்வறவுரை யினை அழகிய ஒரு செய்யுளாக்கினான்; ஆக்கிய அச் செய்யுளை ஓர் ஏட்டில் எழுதினான். எழுதிய ஏட்டைத் தன்னருகே வைத்தான்; உடல் சோர்ந்து வீழ்ந்தான்; உறங்கி விட்டான்.

“போர்க்களம் புகுந்து போரிட்டு, வாள்வடுப் பெற்றவரே, வானுலகம் சென்று மேனிலையுறுவர். இறந்து பிறந்த குழந்தையும், உருவற்றுப் பிறந்த ஊன்தடியும் அவ்வாறு வாள் வடுப்பெறும் வாய்ப்புப் பெறுவதில்லை. ஆதலின், வானிலை பெறும் வாய்ப்பு அவற்றிற்குக் கிட்டுவதில்லை. ஆனால், அவற்றையும் வானுலகம் அனுப்புதல் வேண்டும் என எண்ணும் அன்புள்ளம் உடையராய ஆன்றோர்கள் அவற்றைத் தருப்பைப் புல்மீது கிடத்தி, வெற்றிப் புகழ் பெற்ற வீரர் சென்றவாறே, இவையும் வானுலகம் செல்க!” என வாழ்த்தி, வாளால் வெட்டிப் புதைப்பர். இஃது அரசர்