பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
கோப்பெருஞ் சோழன்

காவிரிக்குக் கரையமைத்த கரிகாற் பெருவளத் தான் காலத்திற்குப் பிறகு, சோழ நாடு இரு கூறுபட்டு, இரு கிளையினரால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்று, புகார் நகரைத் தலைநகராகக் கொண்ட கடற்கரை நாடு, மற்றொன்று, உறையூரைத் தலை நகராகக் கொண்ட உள்நாடு, கரிகாலனுக்குப் பிறகு உறையூரும், உறையூர்ச் சோழருமே சிறந்து விளங்கினர். உறையூராண்ட சோழ அரசர்களுள், கோப்பெருஞ் சோழன் ஒருவன்.

நண்பர் உலகிற்கு நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கியவன் கோப்பெருஞ் சோழன். உயர்ந்த நண்பர்கட்கு உள்ளம் ஒத்தல் ஒன்றே போதும்; அவர்கள் ஒரே நாட்டில், ஒரே ஊரில் பிறந்து ஒன்று கூடி வாழ்ந்து, என்றும் பிரியாது பழகுதல் வேண்டுவதின்று. இந்த உண்மையினை உலகறியக் காட்டிய சிறப்பு கோப்பெருஞ் சோழனுக்கே உரித்து. ஒருவரோடொருவர் நட்புக் கொண்டு வாழ்வதற்கு, இருவரும் ஓர் ஊரினராதலும், ஒருவரையொருவர்