பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 79



நலங்கிள்ளியைக் கண்டார். “நலங்கிள்ளி! நீ வளைத்து நிற்கும் இவ்வரணுள் வாழ்வோனைச் சென்று கண்டேன். அவன் கழுத்தில் சேரனுக்குரிய பனை மாலையோ, பாண்டியனுக்குரிய வேம்பு மாலையோ இருக்கக் கண்டிலேன்; ஆத்தி மாலையினையே அவன் கழுத்தில் கண்டேன். அவன் அகத்திருக்க, வளைத்து நிற்கும் நின்னைக் கண்டேன்; நின் கழுத்தில் இருக்கும் மாலை, உள்ளிருக்கும் சோழனின் பகைவருக்குரிய பனை மாலையாகவோ, வேம்பு மாலையாகவோ இருக்கும் என எதிர் நோக்கினேன். ஆனால், நின் கழுத்திலும் அவ்வாத்தி மாலையே இருக்கக் காண்கின்றேன். இதனால் நீங்கள் இருவருமே சோழர் குடியில் வந்தவர் என்பது விளங்கிற்று. ஆக, இப்போது ஒரு குடியிற் பிறந்தார்களே பகை கொண்டுள்ளீர்கள். இஃது உங்கட்குப் பெரும்பழியாம். மேலும் இருவர் போரிடின், இருவரும் வெற்றி கோடல் இயலாது. ஒருவர் வெற்றி பெறின் பிறிதொருவர் தோற்றல் வேண்டும். உங்கள் இருவரில் யார் தோற்பினும், தோற்றவன் சோழர் குடியிற் பிறந்தவனே! தோற்றது சோழர் குடியே! தோற்றது சோழர் குடி என்ற சொல் உங்கட்குப் பழியும், உங்கள் பகைவர்க்குப் பெருமிதமும் தருமன்றோ? பிறந்த குடிக்குப் பழி தேடித் தருவதோ உங்கள் பிறவிக் கடன்? ஆகவே நலங்கிள்ளி! உறையூர்க் கோட்டைபால் கொண்ட உன் ஆசையை விட்டு அகல்வாயாக!” என்று எத்துணையோ எடுத்துக் கூறினார்.