பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 83



“என் அரசைப் பெற விரும்பும் என் பகையரசன் மெல்ல வந்து, என் அடி பணிந்து, நின் அரசுரிமை யினைத் தந்தருள்க! என்று இரந்து நிற்பானாயின், அவற்கு இவ்வரசையே யன்றி என் உயிரையும் தருவேன். அவன் தூங்கும் புலியைக் காலால் இடறிய குருடனைப் போல, ஆற்றல் மிக்க என் அமைச்சர், படைத் தலைவர் முதலாயினோரை மதியாது, என் உள்ளத்தின் ஊக்கத்தையும் இகழ்வானாயின், அவன் அழிந்து போதல் உறுதி. அன்னோன் யானையின் காலால் மிதியுண்ட மூங்கில் முனையைப் போல் அழியுமாறு அவன் நாடு சென்று வெற்றி கொள்வேன்!” என்று வீரவுரை கூறியிருக்கின்றான்.