பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


பட்டப் பகலில் நடந்த வரலாறாவது:-ஆண்டு, திங்கள், நாள் மணி, இடம், ஆட்கள், நிகழ்ச்சி ஆகிய அனைத்தும் குறிப்பிடப்பட்டு எழுதி வைத்திருக்கும் வரலாறு. வைகறையில் பனி மூட்டத்தில் நடந்த வரலாறாவது : முறையாக எழுதி வைக்கப்படாமல், சங்க இலக்கியங்கள் போன்ற இலக்கிய நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தரப்பட்டிருக்கும் கருக்கமான செய்திகளைக் கொண்டு ஒரு தோற்றமாக எழுதிவைக்கும் வரலாறாகும். சேர, சோழ, பாண்டியர் வரலாறு இத்தகையதே. அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறாவது:- புதைபொருள் அகழ்வாராய்ச்சி, வழிவழியாக வரும் மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு எழுதிவைக்கும் வரலாறாகும், இவற்றுள், பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து காவடி கொண்டு வந்து ஆடும் மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டைக் கொண்டு, மிகவும் பழைய காலத்தில் முருகன் கோயிலாயிருந்தது என்று தீர்மானிக்கலாம்-என்று யான் கூறினேன். இந்த மூன்று வரலாற்று வகை பற்றி யான் ஒர் ஆங்கில வரலாற்று நூலில் படித்தறிந்தேன். இந்த மூவகை பற்றிய செய்தியை 1964 ஆம் ஆண்டே யான் எனது “தமிழ் அகராதிக்கலை” என்னும் நூலில் தந்துள்ளேன்

”Tradition”

யான் இதிசெய்தியை அறிவித்தும், திரு கோபாலய்யர் ஒத்துக் கொள்ளாமல் இலக்கிய ஆதாரம் கேட்டார். இந்த நேரத்தில், ஓய்வு பெற்ற புதுவை அரசுச் செயலராகிய திரு. முத்துக் குமாரசாமி என்னும் அறிஞர் Tradition தான் முக்கியம் என்றார்: அதாவது, மக்களின் பழக்க வழக்கந்தான்-மரபு வழிச் செய்திதான்-செவி வழிச் செய்திதான் முக்கியம் என்பது அவர் சொன்ன கருத்தாகும்.