பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சங்கையும் லைக்கிறார்கள். இயற்கையாக அந்த மூர்த்தியின் திருக்கரத்தில் எந்த ஆயுதமும் இல்லை.

அருணகிரிநாத சுவாமிகள் நான்கு திருப்புகழ் திரு வேங்கட மலை பற்றிப் பாடியுள்ளார். திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே என்று ஒரு பாட்டு வருகிறது.

ஒரு கோவிலுக்குப் போனால் வெளியிலிருந்து அந்தக் கோவிலின் மதிலைப் பார்த்தாலே அது இன்ன கோவில் என்று தெரிந்து கொள்ளலாம். சிவபெருமான் கோவிலாக இருந்தால் மதிலின்மேல் இடபம் இருக்கும். கணபதி கோவிலாக இருந்தால் மூஷிகம் இருக்கும். திருமால் கோவில் என்றால் கருடன் இருக்கும். முருகன் கோவில் மதில் மேல் மயிலைக் காணலாம். -

சோழ நாட்டில் அம்பிகையின் சந்நிதியில் நந்திதான் இருக்கும். தொண்டை நாட்டில் பல கோவில்களில் அம்பிகைக்கு முன்னால் சிங்கம் இருப்பது வழக்கம். திருவேங்கடத்திலுள்ள திருக்கோயிலின் மதில்மேல் சிங்கந்தான் இருக்கிறது.

ஒரு சமயம் ஸ்ரீ காமகோடி ஆச்சாரிய சுவாமிகள் அவர்களை நான் தரிசித்தபோது அவர்கள் இதைப் பற்றிச் சொன்னார்கள். "திருவேங்கடத்தில் உள்ள கோவில் மதில்மேல் சிங்கம் இருக்கிறதே. எதற்கு?" என்று கேட்டார்கள். அவர்களே பின்பு விளக்கினார்கள்: "அது ஒரு சக்தி க்ஷேதிரம், கெளமாரி, வைஷ்ணவி ஆகிய இரண்டு சக்திகளும் சேர்ந்து அங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். இரண்டு சக்திகளும் சேர்ந்து இருப்பதனால் வேங்கடேசுவரருடைய பரிவட்டம் 36 முழமாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் ஒரு பெண்ணுக்கு 8 முழம் என்று சொல்வார்கள். இரண்டு பெண்கள்