பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 உதிர்ந்த முத்துகள் மேற்கண்டவை. தவில் தொறும் நூல் நயம்' என்பதற்கு ஏற்ப மீண்டும் படிக்க படிக்க மேலும் பரிசுகள் பெறலாம். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி'யை ஒரு தன் வரலாறு என்பதினும் நம் காலத்தின் தமிழ் வரலாறு-தன்மான இயக்க வரலாறு என்றே போற்றலாம். இந்நூலால் கலைஞரின் அருமை பெருமைகள் விளங்கினும் அவருக்கு அப்பெருமைகள் வாய்த்திட உதவிய காலத்தின் வரலாறும் பெற்றோர் வரலாறும் தலைவர்கள் வரலாறும் தொண்ட கள் வரலாறும் புகழொளி பெறுகின்றன.