170 (3} விழிமலர்கள் வேலாகும், வாளாகும் தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருதென்றால் (4) கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும்பயணம் கிற்காது. (5) கை மலர்கள் பிணைத்து கிற்கும், தம்பியரை, கழகத்தை? அம்மலரே எதிரிகளை மன்னித்து கெற்கதிர் போல் தலைநாணச் செய்துவிடும்! (6) மக்களாட்சி மலர் குலுங்க சமதர்மப்பூ மணக்க தாய்மொழி தமிழே வாழ்வுப் பொழிலாக ஆடிவரும் தென்றல் காடிவரும் பூமுடியே புகழ்முடியே! உமைத் தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே - தினம் பாடி வரும் வண்டாக கான் பிறப்பேன் உனக்காக எனைத் துறப்பேன்; என - ஒருகோடித் தமிழ் இளைஞர் பாடிகின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன் ..." என்ன செறிவான சொல்லோட்டம்! - பொருளோட்டம்: ஆற்றோட்டத்தைக் கரையோரமிருந்து அன்புக் கையால் அணையிட்டு இன்புறப் பார்ப்போம் ! (ஆ) பேரறிஞர் அண்ணாவை எண்ணும் போது அவர் தம் உடல் மலர்கள் பலவினும் உள்ளமலர் ஒன்றே முன்னே தோன்றி மின்னுகிறது. அந்த உள்ள மலரின் எத்தனை யோ சிறப்புகளுள் ஏற்றமிகு சிறப்பு அம்மலர்-எந்த எழில் மலர் இதழினும் மெல்லியதாய் இருக்கும் மேன்மையே.
பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/182
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை