பக்கம்:இலக்கியத் திறன்.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1945 ஆம் ஆண்டு அக்டோபர் 18, 22 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (ஆனரரி ரீடர் என்ற முறையில்) சிறப்புச் சொற்பொழிவாகத் ‘தமிழில் இலக்கிய ஆராய்ச்சி' என்னும் பொருள் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் எம்.ஏ. வகுப்புக்கு அப் பொருள் பற்றி விரிவுரைகள் நிகழ்த்துதற்கு அப் பேச்சுக் குறிப்புக்களைத் திரும்ப நோக்கினேன். அவற்றை விரிவுபடுத்தி ஒரு நூலாக்க முயன்றேன். இம் முயற்சியைத் தமிழகம் வரவேற்கும் என நம்புகிறேன். இதற்கு அடிப்படையாக அமைந்த அச் சொற்பொழிவினை நிகழ்த்தப் பணித்துப் பின்னர் அதனை வெளியிட்டுக் கொள்ள உரிமையும் நல்கிய பல்கலைக்கழகத்தினரின் உதவியை நன்றியுடன் போற்று கிறேன். மு.வ.