பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தியாகர்

இறைவன் எங்கும் நிறைந்தவனாயினும், குறிப் 4சிட்! . சில இடங்கள் அவன் சிறப்புற வீற்றிருக் கும் கானங்கள் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். அத்தகைய இடங்களில் திருக்கைலாய மலையும் ஒன்று. அங்கு உயிர்கட்கு அருள்புரியும் நோக்கோடு srpந்தருளிய சிவ பெருமானுக்குத் தொண்டு புரிந்து வந்தவர்களில் ஆலால சுந்தரர் என்பவரும் ஒருவர். அவரைப் போலவே உமாதேவியாருக்குப் பணி விடை புரிந்தவர்கள் இருவர். அவர்களுள் ஒருத் தியின் பெயர் அனிந்திதை. மற்றொருத்தியின் பெயர் கமலினி என்பது.

ஒரு சமயம் திருக்கைலை மலையின் சோலையில் மலர் கொய்து கொண்டிருந்த ஆலால சுந்தரர், அம்மையாருக்கு மலர் பறிக்க வந்துற்ற மாதர்கள் இருவரையும் கண்ணுற்றனர். கண்ணுற்ற ஆலால சுந்தரர் அம்மாதர்களை மணந்து வாழ எண்ணி னர். இவர் எண்ணியவாறே மங்கையர் திலகங் களும் எண்ணங் கொண்டனர். உள்ளத்தால் தம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டவர்கள், வாயால் ஒன்றும் உரையாமல் . தம் தம் இருப்பிடம் சார்ந் தனர்.

எங்கும் கண்ணுளானாய் எங்கும் காதுளானாய் நீ ), கமற நிறைந்திருக்கும் இறைவனாம் சிவபெரு