பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


இப்பகுப்பு காட்டப்படும். செம்மலர்கள் கார்காலத்திற்கேற்றவை, மகளிர் சூற்பருவத்தில் செவ்வணி கொள்ளச் சிவப்பு மலரைக் கொள்வர். இவ்வாறு எனது செம்மை நிறம் ஒருதனிப்பாங் குடையது. அடுத்துப் பொன்மை நிறமாம் மஞ்சள் நிறம் எனது மெருகு வண்ணம். மங்கல நிகழ்ச்சிகளுக்கும் வழிபாட்டுக்கும் மருந்து வகைக்கும் சிறப்பாகக் கொள்ளப்படும். வெண்மை து.ாய் மைக்கும், நேர்மைக்கும் புகழுக்கும்கொள்ளப்படும். நீலம்,அழகுக்கும் கவர்ச்சிக்கும் கொள்ளப்படும் வண்ணம்; துயரத்திலும் நிற்கும். என்னில் ஒர் இனமே நான்கு ஐந்து வண்ணங்களைப் பெற்றுள்ளது. - = -- . . அல்லி எனும் ஆம்பல் சிவப்பு (அரக்காம்பல்) , இளஞ்சிவப்பு (செங்கழுநீர்), வெண்மை (வெள்ளாம்பல்), நீலம் (குவளை) என நான்கு நிறங்களில் அமைந்து வெவ்வேறு பெயர் பெறும். ஒரு பெயரிலே ஐந்துவண்ணங்கொண்டது குறிஞ்சி. இது ஐவண்ணக் குறிஞ்சி எனப்படும். பவளக்குறிஞ்சி செம்மை; பெருங்குறிஞ்சி, வெண்மை; வாடாக்குறிஞ்சி-செந்நீலம்; மழை வண்ணக் குறிஞ்சிநீலம்; பொன் வண்ணக் குறிஞ்சி-மஞ்சள் என 102 நிகண்டுகள் புகுத்து தனித்தனிப் பெயரையும் வழங்கியுள்ளன. எனது நிறங்களைக் கண்டு சுவைத்தவர்களும் உளர். தொழுதவர்களும் உளர். பே:ற்றியவர்களும் உளர் தாம் படைத்துக் கொண்ட கடவுளர் உடல் வண்ணங்களுக்குப் பொருத்தி ம்கிழ்ந்தோர் பலர். சிவப்பு: "செச்சைமாமலர் புரையும்மேனி" 0.3 -சிவபெருமான் " -: , செங்காந்தள் ஒக்கும் நின்நிறம்'104 - முருகன் : "மாதுளம்பூ நிறத்தாளை 10 5 - அபிராமி நீலம் : திரு நிறமாய்க் கருங்குவளைட் 100 'காயாம்பூ வண்ணன்' (டி - திருமால் 'காயா மலர் மேனி'- 108 கொற்றவை - வெண்மை: வெண்கடப்பம் பூ 109 - பலராமன் கருநீலம் : காஞ்சி 109 - மன்மதன் 102 பிங் நி, 2696 - 2700 108 திருவா : திருச்சதகம் : 29 - - - 104 தொல் : சொல்: 292 சேந்நாவரையர் மேற்கொள் பாடல். 105 அபி . 1 - 108 சிலம்பு வேட்டுவவரி 12:4 106 திருவாய். பெரி: மாதவத்தோன்: 3, 109 கலி : 26:1-8 107 கூர்ம்ம்: இ. அவதாரம்