பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


2. இதுபோன்று மகளிர் தலையிற் சூடுவது, கூந்தலைக் கோதிச் சூடுவதால். ...கோதை 'மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும் 194 -என்று பட்டினப்பாலை அடையாளங் கூறு கின்றது. மகளிர் சிலபோது தலையிற் சூடிக் காது வழியே கன்னத்திற்-கதுப்பிற்-படுமாறு அமைவதும் கோதை 85 னப்படும். மகளிர் தொடர்பில் ஆடவர் மார்பில் அணி யப்படின் கோதைப் பெயர் பெறும். 186 3. மகளிர் கொண்டை உச்சியில் சுற்றிச் சூடு மாறு அமைக்கப்படுவது ...சிகழிசை 4. இதுபோன்று ஆடவர் தலையில் தலைக் கட்டுக் குடுமியில் சும்மாடு போன்று சுற்றிச் சூடிக்கொள்வது ...இண்டை சிவபெருமான் இண்டை நிகர் சுமையடை மேற் கூடை கவிழ்த்து’’18 வந்தாராம், 5. மகளிர்க்கும் குழந்தைகட்கும் தலையிலி ருந்து தொங்கி நெற்றியின் நடுவில் படு மாறு சூட்டுவது ...குட்டு இவ்வாறாகக் கண்ணி, கோதை; சிகழிகை, இண்டை, சூட்டு ஆகிய ஐந்தும் தலை அணிகள். கழுத்தில் அணியப்படுவன பலவகைப்படும். 6. நீண்ட நாரின் வழி பூக்களை அடுக்கி நார் இழையால் வளைவாகக் கட்டப்படுவது- - மார்பில் அணிவது ...மாலை 7. திரண்ட தேர் உருள்போலப் பருத்ததாக மார்பு நிறைந்து புரள்வது ..தார் " வண்ண மார்பில் தாரும் கொன்றை'188 164 பப்; பா : 110, 111 - 165 நெறியிருங் கதுப்பிற் கோதையும்' -அகம் 269 : 2 166 கோதை யார் பிற் கோதை யானும்' -புறம் 48 - 1 167 திகுவி: யு : மண் : 16 168 புறம் : கடவுள் வாழ்த்து :2