பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114

இன்பமும் செய்யா காலத்தோடு கூடியிரா பொருளும் அறிய வாரா; ஆயினும் தந்தையர்க்கு அருளுதல் வந்தன பிள்ளைகளுடைய இளஞ்சொல்’ என்று ஒளவையாரும் மக்கட் செல்வத்தின் - மழலை மொழியின் மாண்பினைப் பாராட்டியுள்ளார்:

“ யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா

பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க்கு அருள்வர் தனவாற் புதல்வர் தம்மழலை.”* ஒளவையாரின் இப்பாடலைப் பின்பற்றியே திருக் கழுமல மும்மணிக்கோவை யாசிரியர்,

“ எழுத்தி னுறழாது வழுத்து பொருளின்றிக்

குறிப்பொடு படாஅது வெறித்தபுன் சொல்லே ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி குழலினு யாழினு மழகிதாம்’ என்று கூறியுள்ளார். திருவள்ளுவர் பெருமானும், “ பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற’ என்று பொருத்தமுறப் புகன்றுள்ளார். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதியைச் சார்ந்த செய்யுளாய்ப் பின்வரும் செய்யுள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளது:

“ பொறையிலா வறிவு போகப்

புணர்விலா விளமை மேவத்

துறையிலா வனசவாவித்

துகிலிலாக் கோலத் தூய்மை

8. புறநானூறு 92 , 1-8 9. திருக்கழுமல மும்மணிக் கோவை : 28 : 2.5

10. திருக்குறள் : 61