பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

265

  • சமாகிதம்’ என்பர். தமிழில் அங்கில சமயிலே’ என வழங்கும். இன்ப துன்பத்தினை ஒப்ப மதிக்கும் உயர் குணச் செம்மல்களைக் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்’ என்று சேக்கிழார்பெருமான் தம் பெரியபுராணத்தில் குறிப் பிட்டுள்ளார்,’

இனி முறை என்ற சொல்லின் விளக்கங் காண்போம். இச்சொல் பல பொருள்களில் பொதுளும், பிங்கலங்தை ரிகண்டு “கோசமும் பழமையும் ஊழுங் கூட்டும். ஆர்ப்பும் முறைமையும் முறையெனலாகும்’ என்று குறிப் பிடுகின்றது. மேலும்.

“ ஏடங்கை கங்கை இறையெங்கள் முக்கண்ணி

வேடம் படிகம் விரும்பும் வெண் டாமரை. பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் குடுமின் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே” என்ற திருமர்திரப் பாடலும்,

“ இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்

முறைவரை வேனென முயல்வ தொக்குமால் அறுமுக முடையவோர் அமலன் மாக்கதை சிறியதோ ரறிவினேன் செப்ப நின்றதே” என்ற கந்தபுராணச் செய்யுளும், முறை என்ற சொல் நூலையும் அதன் உட்பிரிவுகளையுங் குறித்து வழங்கும் என்பதனை உணர்த்துகின்றன.

சமயகுரவர் வாயிலாகச் சிவபிரான் திருவாய் மலர்ந்தருளிப் பின் வெளிப்படுத்தி யருளிய தனிச்சிறப் :புடையனவாகத் திருமுறைகளைக் கருதலாம். “எனதுரை தனதுரையாக” என வரும் தி ரு ஞா ன சம் பங் த ப்

2. திருக் கூட்டச் சிறப்பு : 8 3. திருமந்திரம் ; 1067 * -4. கந்த புராணம் : அவையடக்கம் :1