பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலக் கல்வி நிலை

31


டுளன்?" என்று கேட்டான். அவள் அவனை அன் புற நோக்தி, 'இச்சிறிய வீட்டில் உள்ள தூணைப் பற்றி நின்று, நின் மகன் யாண்டுளன்? என்று கேட்கின்ருய். வலிய புலி இருந்து சென்ற குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுதான். அவன் போர்க்களத்தில் இருப்பான்” என்று விடையளித் தாள். இவ்வாறு உரை நடையில் அவள் விடை யிறுத்தாள்ா? இல்லை, இல்லை; கீழ் வரும் செய்யு ளாக விடையளித்தாள்:

" சிற்றில் நற்றுரண் பற்றி நின்மகன்

யாண்டுள குே என வினவுதி என்மகன் யாண்டுள குயினும் அறியேன். ஒரும் புவிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிருே இதுவே! தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே'

சங்க காலக் காவற் பெண்டின் கவிதையைக்

கண்டு மகிழ்க! பொன்முடியார்

பொற் கம்பிகள் போலத் தலை முடி நரைத்த மூதாட்டியார் ஒருவர் பொன்முடியார் என்று அக் காலப் புலவரால் அழைக்கப்பட்டார். அவ்வம்மை யார் கீழ்வரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்: "மகனைப் பெற்றுச் சமுதாயத்திற்குத் தருதல் எனது கடன்; அவனைக் கல்வி கேள்வி ஒழுக்கங்களில் சிறந் தவன் (சான்ருேன்) ஆக்குதல் தந்தையினது கடமை. அவனை நல்ல குடி மகளுக வாழச் செய் வது வேந்தன் கடமையாகும். அவனுக்குத் தேவை யான போர்க் கருவிகளைச் செய்து கொடுத்தல் கொல்லன் கடம்ையாகும். போர் க் களத்தில் யானையை வென்று மீளுதல் மகனது கடமையாகும்." இக்கருத்து அடங்கிய கீழ் வரும் செய்யுள் பொன் முடியார் பாட்டாகும்:

' ஈன்று புறந்தருதல் என்தலேக் கடனே

சான்ருேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே