பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இலக்கிய அமுதம்


தெற்கே இருந்த பாண்டியரும் மேற்கே இருந்த சேரர், கங்கர், கதம்பர் என்பவரும், பல்லவ நாட்டுக்கு வடமேற்கே இருந்த சாளுக்கியரும், அவர்க்குப் பின்வந்த இராட்டிரகூடரும் பல்லவருடன் ஓயாது போரிட்டனர்.

கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவப் பேரரசு ஒழிந்து, சோழப் பேரரசு ஏற்பட்டது. சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும், நந்திக் கலம்பகத்திலும், பாரத வெண்பாலும், சில தனிப்பாடல்களிலும் பல்லவரைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதனைத் தோற்றுவித்த ஆதித்த சோழன் முதல் மூன்றாம் இராசராசன் வரையில் சோழப் பேரரசர் பலர் தமிழகத்தின் பெருநிலப் பரப்பை ஒரு குடைக்கீழ் வைத்தாண்டனர். இப்பேரரசரும் பாண்டியருடனும் சேரருடனும் இலங்கை அரசருடனும் இராட்டிரகூடருடனும் அவர்க்குப்பின் வந்த சாளுக்கியருடன்னும் பல போர்கள் செய்ய வேண்டியவராயினர். ஆயினும், போர்க் கப்பல்களைச் செலுத்திப் பல தீவுகளை வென்ற பெருமை இச் சோழர்க்கே உரியது. சோழப் பெருநாடு வடக்கே துங்கபத்திரை யாறு வரை பரவியிருந்தது. இப்பெரு நாட்டை ஏற்படுத்தியவன் முதலாம் இராசராசன். கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மைசூர்ப் பகுதியை ஆண்ட ஹொய்சலர் படையெடுப்பாலும், தம்மாட்சி பெற்ற பாண்டியர் படையெடுப்பாலும் சோழப் பேரரசு ஒழிந்தது, சோழர்களின் போர்ச் செயல்களை ஒன்பதாம் திருமுறை, கலிங்கத்துப் பரணி, மூவருலா, பெரிய புராணம் முதலிய தமிழ் நூல்களில் காணலாம்.

கி. பி. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாலிக்-காபூர் என்பவர் விந்த மலையைக் கடந்து யாதவ அரசரையும், ஹொய்சல அரசரையும் வென்று, பாண்டி நாட்டையும் கைப்பற்றினார். தமிழகத்துச் செல்வம் கொள்ளை போயிற்று. சிறிது காலம் தமிழகம் நிலை தளர்ந்தது; விஜயநகர அரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/7&oldid=1459213" இலிருந்து மீள்விக்கப்பட்டது