பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ்

91


தமிழகத்தில் பல்லாயிரம் இளைஞர்களே நல்ல தமிழில் பேசப் பழக்கிவரும் அறிஞர் அண்துைரை சந்திரமோகன், நீதி தேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி, சுவர்க்கவாசல், இரங்கோன் இராதா என்ற நாடகங்களை வரைந்துள்ளார். அவற்றுள் சந்திர மோகனில் ஆசிரியரே கங்கு பட்டராக நடிப் பார். இவர் நடிப்புக் கிலேயிலும் சிறந்து விளங்குகிருர்.

பூந் தேவி நாடக சபாவின் உரிமையாளரான கே. என். இரத்தினம் குழுவினர் பல நாடகங்களை நடத்தி வருகின்றனர். அவற்றுள் வரலாற்றை அடிப் படையாகக் கொண்டது தந்திவர்மன் நாடிகமாகும். தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் வரலாற்றுப் புகழ் பெற்றவன்; சிறந்த போர்வீரன்; மிகச் சிறந்த சிவ பக்தன், நந்திக் கலம்பகம் பாடப் பெற்றவன். அப் பெரு மகனைப் பற்றிய நாடகம் மிகவும் நல்லமுறை யில் அமைந்துள்ளது.

முடிவுரை

இமிழ் நடிகர் தமிழகத்து வரலாற்றையும் இலக் கியத்தையும் நன்கு பயிலுதல் நல்லது தூய எளிய தமிழ் நடையில் உரையாடல்களை அமைத்து நடித் தல் வரவேற்கத்தக்கது. பாடல்கள் சிலவாகவும், உரையாடல்கள் பலவாகவும் அமைந்துள்ள நாடகங் களையே நடித்தல் ஏற்புடையது. பொருத்தமற்ற இடங்களிலெல்லாம் பாடுதல் வெறுப்பைத் தரும். இவை அனைத்திற்கும் மேலாக, நடிகரிடம் கட்டுப் ப்ர்டும் ஒழுக்கமும் மிகுந்திருத்தல் வ்ேண்டும். வருங் காலத் தமிழகத்தில் பட்டம் பெற்ற இளைஞர்களும் இக்கலையில் பயிற்சி பெறுதல் நல்லது. கல்விமான் கள் நாடகத்தில் நடிப்பது வரவேற்கத் தக்கது. தமி ழுணர்ச்சி வீறுகொண்ட இக்காலத்தில், தமிழ் நடிகர் நாடகக் கலை வளர்ச்சியில் ஊக்கம் கொள்ளுதல் நல்லது. நன் முறையில் அமையும் நாடகங்களைத் தமிழ் மக்கள் எப்பொழுதும் வரவேற்பர் என்பது திண்ணம்,