பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இலக்கிய அமைச்சர்கள் கருத்திற்கு ஏற்றவாறு தோற்றமளிக்கும் இனிய நூலாகும். அந்தனர் இதனை வேதம் என்று வியந்: தோதுவர். யோகியர் இதனை ஆகமத்தின் அடிப்படை யான நூல் என்று குறிப்பர். காமுகர் இஃதொரு காம நூல் என்று கற்றுக் கற்றுக் கழிபேரின்பம் எய்துவர். தருக்க நூலார் இது சிறந்ததொரு தருக்கநூல் என்று தலைக்கொண்டு போற்றுவர். புலவர்களோ இஃதோர் இலக்கண நூல் என்று கற்றுத் தெளிவர். இத்தகைய பல்சுவைக் களஞ்சியமாகத் திருக்கோவையார் திகழ் கின்றதென மகிழ்ந்து போற்றியுள்ளார் ஒரு புலவர். சைவ சமயத் தோத்திர நூல்கள் பன்னிரு திரு முறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன அவற்றுள் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை யாக இடம் பெற்றுள்ளன.