பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இலக்கிய அமைச்சர்கள் பொருள் இல்லாதவர்க்குப் புவியில் வாழ்வே இல்லை. அத்தகைய பொருளைப் படைத்தற்கும் வளர்த்தற்கும் காத்தற்கும் அரசு இன்றியமையாதது. அவ்வரசின் இலக்கணத்தைப் பொருட்பாலின் முதற்கண் போற்றி யுரைத்தார் பொய்யில் புலவர். அரசினை நடத்தும் அருந்திறல் வேந்தர்க்குப் பெருந்துணையாய் விளங்கு வோர் அமைச்சராவர். அவரது இலக்கணத்தை அரசியலை அடுத்து வகுத்துரைத்தார் வள்ளுவர். அரசியல் வண்டியில் பூட்டிய எருதுகள் அரசியலாகிய வண்டியை இழுத்துச் செல்ல அரசன் ஒருவல்ை இயலாது. வண்டியை இழுத்துச் செல்லும் இரு காளைகளைப்போல அரசனும் அமைச் சனும் சேர்ந்து அரசியல் வண்டியை இழுக்கவேண்டும். இருவரும் திறம்பட இழுத்தால்தான் அவ்வரசியல் வண்டி செங்கோன்மையாகிய நன்னெறியில் சென்று நாட்டு மக்களுக்குப் பன்னலங்களையும் விளைக்கும். இக்கருத்தைச் சூளாமணி நூலாசிரியர் தெளிவாகச் சொல்லியுள்ளார்: .مي வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் ஒருவ ளுலே தாங்கலாம் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தார்ச்சீர்ப் பாங்கலார் பணியச் சூழும் நூல் வலார் பாக மாகப் பூங்குலாம் அலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கும் அன்றே.' வள்ளுவர் அமைச்சியல் இவ்வாறு அரசியல் நடாத்துவதில் அரசனுக்கு ஒப்பாக மதிக்கத் தக்க அமைச்சனது இயல்பைத்