பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இலக்கிய அமைச்சர்கள் ரதன் அமைச்சர்கள். அரசன் வெகுண்டாலும் அவ் வெம்மையைத் தாங்கிக்கொண்டு நீதியை விடாது நின்று உரைப்பார்கள். அரசனுல் தம் உயிர்க்கு இறுதி நேர்ந்தாலும் உறுதியை உரைப்பதில் உள்ளம் தளர மாட்டார்கள். செங்கோன்மையில் சிறிதும் பிறழாத தெளிவுடையார்கள். முக்காலமும் உணர வல்ல மூதறி வாளர்கள். அனைவரும் ஒரே கருத்தை ஒற்றுமையாக gp_6Ø J LILÍÍTITó56)T. தம்முயிர்க்(கு) இறுதி எண் ணுர் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி - விடாதுகின்(று) உரைக்கும் வீரர் செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார் ஒருமையே ம்ொழியும் நீரார்.' இப்பாடல் அமைச்சர்க்கு அமைய வேண்டிய அரிய பண்புகளையெல்லாம் அழகுற விளக்கும் அமு தனைய பாடலாகும். மதியமைச்சரும் மருத்துவரும் தயரதன் அமைச்சர்கள் மருத்துவரைப் போன்ற மாண்புடையவர்கள். மருத்துவர் நோயாளனது நோய்ைப் போக்க எத்தகைய சிகிச்சையையும் மேற் கொள்வர். உடலில் ஏற்பட்ட சிறு புண்ணுல் அவ்வு லுக்கே பெருங்கேடு விளைவதாயிருப்பின் அப்புண்ணைக் கத்தி கொண்டு அறுத்தும், காரம் வைத்துச் சுட்டும் அறுவை மருத்துவம் செய்வர். அங்ங்னம் பெருத்த வேதனையை விளைக்கும் மருத்துவத்தை அன்னவர் செய்யினும் அவர்கள் நோக்கமெல்லாம் நோயாளனது