46 இலக்கிய அமைச்சர்கள் குறிப்ப்ர். பாணர் பாடும் பாடலுக்கு ஏற்ப ஆடும் இயல் பினர் விறலியர். தாமும் பாடிக்கொண்டு ஆடும் பண் புடையார் பாடினியர் எனப்படுவர். ஆடலும் பாடலும் வல்ல அரிவையாராகிய ஒளவையார், இளமையிலேயே புலமை மிக்கு விளங்கினர். அவருடைய அறிவும் திறலும் கண்ட ஆடவர் அவரை மணஞ்செய்து கொள்ள அஞ்சினர்போலும் ! அன்றித் தமது புல மையை உலகிற்கு நன்கு பயன் படுத்த வேண்டும் என்ற அருள் உள்ளத்தால் அவர் இல்லற வாழ்க்கை யில் ஈடுபடாது இருந்தனரோ ? இன்னதென அறி யோம். அவர் இளமையிலேயே துறவுநெறி பூண்டு தூய வாழ்வை மேற்கொண்டு ஒழுகினர். நல்லிசைப் புலமை மெல்லியலாராய் நாடெங்கும் சுற்றி மன்னர் களையும் வள்ளல்களையும் இன்னிசைப் பாக்களால் புகழ்ந்து பாடினர். அவர்கள் அன்புடன் வழங்கிய கொடையைப் பெற்று வாழ்வைத் தடையிலாது நடத் திர்ை. அமைச்சர் ஒளவையார் இத்தகைய பரிசில் வாழ்க்கையை உடைய பைந் தமிழ் மூதாட்டியாரை அதியமான் தனக்கு அறிவுரை கூறும் அமைச்சராகப் பெற்ருன். அதியமானுக்கு ஒரு நாள் அருமையான நெல்லிக்கனியொன்று கிடைத்தது. அஃது அவன் நாட்டு மலையொன்றின் உச்சியில் மக்கள் ஏறுதற்கரிய உயரத்தில் அமைந்த பிளவில் தோன்றிய நெல்லி மரத்தினின்று அரிதாகக் கிடைத் தது. அது பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை பழுப் பதாய சிறப்புடையது. அதனை உண்டார் ஊறின்றி நெடுநாள் உடலுரத்துடன் வாழ்வர். அத்தகைய
பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை