பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. அகத்தியனர்க்குத் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியர் அகத்தியர் இறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு தமிழ் நாட்டிற்குப் புறப்படுங்கால், தென்னாடு தமிழ்மொழி வழங்கும் நாடு என்றும் அங்குள்ள மக்கள் அம் மொழியில் வல்லவர்கள் என்றும் அவர்கள் கேட்பவற்றிற்குத் தாம் விடை கூறுதல் வேண்டும் என்றும் ஆதலால் தமக்குத் தமிழ் இலக்கணத்தை அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினராம். இறைவனும் இவர் வேண்டியவாறு இவர்க்கு அள்ளிலக்கணத்தைக் கற்பித்தனர் என்று திருவின் யாடற் புராணம் உணர்த்துகின்றது. இவ்வரலாற்றால் சிவபெருமானே அகத்தியர்க்கு முதல் ஆசிரியர் என்பது தன்கு புலப்படுதல் காண்க. காஞ்சிப் புராணமும் இங் ஙனமே லேறுவது நோக்கற்பாலது. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பரும் இராமாயணத்துள் அகத்தியப் படலத்திலுள்ள "உழக்குமறை நாலினும் உயர்த்துலக மோதும் வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்." என்ற பாடலில் சிவபெருமான் அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்திய செய்தியைக் குறிப்பிட்டிருத்தல் உணரத் பாலதாம். இனி, தொல்காப்பியப் பாயிர விருத்தியில் ஆசிரியர் சிவஞான முனிவர் 'தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்; அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்திய செந்