ఖీ இலக்கிய இயல்: அதற்குத் துணே புரியும் மூன்று வட்டக் கூறுகள் இரண்டு வருமாறு: காடக வாழ்க்கை --வாழ்க்கை நாடகம் காங்கம் 验_珑 EG வாழ்க்கை இயலின் நெகிழ்ச்சியும் வளர்ச்சியுமே இசையும் கூத்தும். முதலின் முதிர்ச்சியே கருவும் உரியும். பின்ன தன் உண்மையை உணர முதல் என்பது நிலமும் பொழுதும் என்றும்; கரு என்பது (1) தெய்வம், (3) உணவு, (3) விலங்கு, (4) மரம், (5) பறவை, (6) பறை, (இசைக்கருவி). (?) தொழில், (8) யாழ் முதலியன என்றும்; உரி என்பது குறிஞ்சி (மலைகிலம்), முல்லை (காட்டு கிலம்), மருதம் (வயல் கிலம்), நெய்தல் (கடற்கரை கிலம்), பாலே (காடும் மலையும் கெட்டுத் தோன்றும் வறண்ட நிலம்), ஆகிய ஐவகை நிலங்கட்கும் முறையே அவற்றிற்கு உரிய காதலர் கூடுதல், பிரிந்த தலைவன் வரும் வரை தலைவி பொறுத்து ஆற்றியிருத்தல், பெரிதும் பரத்தையிடம் பிரிந்த தலைவனின் ஒழுக்கமின்மை பற்றித் தலைவி வெகுண்டு ஊடல், தலைவனின் பிரிவுக்குத் தலைவி பெரிதும் இரங்கல், தலைவியைத் தலைவன் பிரிதல் ஆகிய ஒழுக்கங்கள் என்றும் தொல்காப்பியம் முதலான இலக்கணங்கள் கூறும் வரையறையை கினேவூட்டிக் கொள்ளல் பயன் தரும். இவ் ஐவகை ஒழுக்கங்களுள் குறிஞ்சி தவிர
பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e6/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85-%E0%AE%86.pdf/page56-633px-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85-%E0%AE%86.pdf.jpg)