பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Go.com'." வெட்டப் படும்.ஒரு நாள்வரு மென்று விசனம் அடைந்தனையோ? குந்த நிழல் தரக் கந்த மலர்தரக் கூரை விரித்த இலை! வெந்து கருகிட இந்த நிரம்வர வெம்பிக் குமைந்தனையோ? கட்டை யெனும்பெயர் உற்றுக் கொடுக்துயர் பட்டுக் கருகினையே? பட்டை யெனும்உடை இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே! காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக் கலங்கும் ஒருமனிதன் ஒல மிடக்கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே! பாடும் பறவைகள் கூடி உனக்கொரு பாடல் புனைந்துதவும், மூடு பனித்திரை யூடு புவிக்கொரு மோகங் கொடுத்துதவும், 185