பக்கம்:இலக்கிய தீபம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4. நெடுநல்வாடையும் நக்கீரரும்* கலன் செந்தமிழணங்கு தன் மக்களாகிய சங்க மருவிய சான் றோரைத் துணைக்கொண்டு தனது நெறிவழியே செல்ல, கால மென்னும் ஆறலை கள்வன் வழிமறித்து அவளது அணிகள் -களையெல்லாம் கவர்ந்துகொள்ள முயன்றனன், துணை வந்த சான்றேர்கள் அவனைத்தகைப்பதும், அவன் அதிக்கிர மித்து ஆபரணங்கள் பலவற்றையும் பறித்துக்கொண்டனன், ஒரு சிலவே எஞ்சின. இவற்றைச் சேகரித்து அச் சான் றோர்கள் தம் அருமைத்தாயராகிய தமிழ் மடவரலது கையி லுய்ப்ப, அம்மடவரல் தானும் பிற்காலத்துள்ள தனது மக்கட்கென வழிமுறையே உரிய மாநிதியாக உதவியவை களில் பத்துப்பாட்டு ' என்னும் அரும்பெறல் மணிக் கோவையும் ஒன்கும். -" ட இம் மணிக்கோவையி னுள்ளே ஏழாவது மணியாக கின்து மிளிர்வது கால் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட நெடுநல் வாடை.' இம்மணியினது உயர்வைப் பரிசோதித் தற்குச் சிறந்த ரத்ன பரிசோதகன் ஒருவன் வேண்டுமென் பது மலையிலக்கு. அங்ஙனமிருப்பவும், யான் அத்தொழிலை மேற்கொண்டது தமிழன்னையார் மாட்டு எனக்கு உள்ள பக்தியினது பெருவளி ஈர்த்துச் செல்லுகனானென்க. பாட்டுடைத் தலைவன் தக்கீரனுாசென்னும் புனவர்பெருமான் தலையாலங்கானத் துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவ

  • ஆசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய ஓர் ஆங்கிலக் கட்டுரை யைத் தழுவி 1912-ல் எழுதிப் பாளையங்கோட்டை சைவசபையில் பேசப்பட்டது. பின்னர், 1937-ல் திரு.ச.த.சற்குணர் B A., அவர்களின் அறுபதாவது ஆண்டு விழா மலரில் வெளிவந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/53&oldid=1481531" இலிருந்து மீள்விக்கப்பட்டது