பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii எட்டுத்தொகை-பட்டினப்பாலை-பாரி.வள்ளல்-காப்பியத் தமிழ்-குறவஞ்சிப்புலவர்-திரு. வி.க.வின் இந்தியாவும் விடுதலையும், டாக்டர் மு. வ. அவர்களின் நாவல் திறன் -ஆகிய தலைப்புக்களைக் கொண்டே-இந்த ஏடு பல்சுவை யும் பயப்பது கண்டு கொள்ளலாம். இந்த இருபதாம் நூற்றாண்டில், கவிதை முக்கியத்துவம் உடையதே. எனினும், கட்டுரையே கருத்துக்களைத் தெளிவுபடுத்தும் வல்லமையால்-பெரிதும் மேற்கொள்ளப்படுவதா கும். அத்தகைய கட்டுரைகளைத் திறம்பட வழங்கியது மூலம் தமிழ் மொழி ஆக்கத்திற்கு ஆசிரியர் ஆற்றியுள்ள பணியை நான் வரவேற்கின்றேன். முன்னரும் பல நூல்களை உருவாக்கியுள்ள- நூலகத் துறைப்பேராசிரியர், நூலகங்களின் அகப்பொருளாய் விளங்கும் இலக்கியச் செல்வத்தைப் பெருக்குவதை-பின்னரும் தொடருவார் என்னும் உறுதி எனக்குண்டு. அவரது தொண்டு வளர வாழ்த்துகிறேன்.

                 அன்பன், 

சென்னை, 24-7–75. (ஒம்) க. அன்பழகன்