பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹽 பிள்ளை :ர்கள் சாற்றிய சாட்டுத் திருநாமத்திற்கு இச்சூழ்நிலை அரணாக அமைந்தது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். இஃதுதான் இறைவன் அடியேனுக்கு விட்டவழி என்று நினைந்து கொண்டிருப்பவன். அடியேனை அறியாதவர்களுக்கு இது சுய புராணக்' குறிப்பு > இத்தகைய இ ய ல் பு ை- ய அடியேனுக்கு போற்கோவின் அழைப்பு கரும்பு தின்னக்கூலி கொடுப்பதாக அமைந்தது. பொதுவாக இத்தகைய பேச்சுக்கு எழுத்து வடிவம் தந்தபிறகே பேச்சில் ஈடு படுவேன். அந்த முறையில் இப்பேச்சு எழுத்து வடிவம் பெற்றது. அறையில் உருவான எந்த எழுத்து வடிவத்தையும் அச்சுவடிவமாக்கி அம்பலத்திற்குக் கொண்டு வருவது அடியேனது மற்றோர் இயல்பு. அந்த முறையில் இப்பேச்சு அச்சு வடிவம் பெற்று தமிழ் கூறும் கல்லுலகத்தில் உலவும் பேறும் பெற்றுத் தமிழன்பர் க.கு விருந்தாகவும் அமைகின்றது. - இந்த நூலை தம் அணிந்துரையால் அழகு செய்யும் ஒத்த வழக்கறிஞர் இரா. காந்தி அவர்கள் நாடறிந்த நல்லவர்; சமூகத்தொண்டர். அநீதி தலை எடுக்கும் இடங்களில் எல்லாம் அவசரமாகத் தலையிட்டு அவற்றைக் களைய ஒல்லும் வகையெல்லாம் உதவும் ஒழுக்கசீலர். இவர்தம் அரிய தொண்டையும் சீரிய ஒழுக்கத்தையும் கண்ட தமிழக ஆளுநர் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவில் பெயர் குறிப்பிட்டு இடம் பெறச் செய்தார். அங்கும் பல்லோரும் போற்றும் வகையில் அநீதிகளை எதிர்த்து அவை தலைதுாக்காமல் விழிப்புடின் செயலாற்றுபவர். இத்தகைய அன்பர். என் அரிய நண்பர், இந்நூலுக்கு அணிந்துரை அருளியது இந்து வின்புேது: அடியேனின் பேறும். ஆகும். இத்தகைய நல்ல தண்டிருக்கு அடியேனின் நன்றி என்றும் உரியது.