பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு கதை * மெளனி மற்றொருவர் : பா. ச. ராமாமிருதம். இம் மூவருடைய கதைகளினால் தமிழ் உ..லகமே பெருமை அடையலாம். உலகச் சிறு கதை இலக்கியத்திற்குத் தமிழக மும் தனது சிறந்த பங்கைச் செலுத்த வேண்டுமென்றால், புதுமைப் பித்தனின் ' சாப விமோசனமும் ' மெளனி புதன் * எங்கிருந்தோ வந்தான்' என்ற இரண்டு கதைகளே

போதும்.

வேறு பல ஆசிரியர்களிடமும் நல்ல கவிதகள் பிறக் கா மலில்லை. எத்தனையோ நல்ல கதைகள் பொறுக்கலாம்.

ஆனால், மேற்சொன்ன மூவருடன் மட்டும் சிறு கதை வளர்ச்சி முடிந்துவிடவில்லை. இன்று தமிழ் நாட்டிலுள்ள ஆர்வம் மூவாயிரம் சிறு கதை ஆசிரியர்களைச் சிருஷ்டித்து விடமுடியும். அதற்கு இன்றைய ஆசிரியர்களுக்கு நெஞ்சில் உரம் வேண்டும் ; நேர்மை வேண்டும். வாழ்க்கையில் தீக்ஷண்ய நோக்கு வேண்டும். இவை இருந்து விட்டால், சிறு கதை இலக்கியம் பிரமாதமாக வளரும் என்பது என் நம்பிக்கை.