பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

களும் கலந்திருக்கின்றன, ஆகவே நாடகம் என்பது தரித்ததல்ல, நடிப்பு, இசை, வர்ண விஸ்தாரம், பேச்சு, வேஷகம் முதலிய பற்பல கலைகளின் சம்மேளனம், கலவை என்றே கடறலாம்,

நாடகம் பல கலைகளின் சம்மேளனமாக இருப்பதனால் தான், கழுத்துக் கலையில் மட்டும் வல்லவர்கள் இதில் இறங்கி உழைக்க அஞ்சினார்கள். மேலும், நாடகம் எழுதத் துணியவலுக்கு தமது நாட்டு நாடக மேடையின் கூடிய பட்சச் சௌகரியங்கள், நாட்டு மக்களின் விருப்பம், நடிகர்களின் தரம் முதலியவைகளைப்பற்றிய நிர்ணயமான அறிவு வேண்டும், ஏனெனில், ஒரு நாடகம் போடுவ தென்றல் காலமும், பொருளும் செலவாகும். அப்படிச் செலவு செய்வதற்கும், அதை அந்த நாடகம் மூலம் பெற வழி செய்வதற்கும், முதலாளி ஒருவனும் வேண்டும். ஆகவேதான் பேனாவைமட்டுமே நம்பி உயிர் வாழ்ந்து வந்த மறுமலர்ச்சியாளர்கள், இந்தத் துறையில் இறங்கி உரைக்கவில்லை.

சரி, இன்று இருக்கட்டும், தமிழில் எந்தக் காலத்தி லேனும் நாடகம் செழித்தோங்கி வளர்ந்திருக்கிறதா என்று 417ார்த்தால், அதுவும் இல்லை, நாடகம் என்ற பெய ருக்கு உருப்படி 41சய் ஒரு நல்ல நூல் இருக்கிறது என்று 12சர்தட்டிச் சொல்ல வழியில்லை. அதாவது, தமிழில் நாடகம் இல்லை. " சம்பந்த முதலியார் மலை மலையாய் எழுதிக் குவித்திருக்கிறாரே, மனோன்மணியம், மான விஜயம் இவையெல்லாம் நாடகம் இல்லையா? என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில், ஜவுளிக்கடை பில் சேலைகட்டிய மாதாய் நிற்கும் பொம்மையை, பெண் என்று ஒப்புக்கொள்ளத் தயாரானால், இவற்றையும்

102