பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோக வனம்

119

" இலங்கையில் நீலகிரியைப் போல ஓர் இடம் இருக்கிறது. அங்கே உதகமண்டலத்தைப் போன்ற நகரம் நுவரெலியா, அதற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். இன்று மத்தியான்னச் சாப்பாடு அங்கே.”

நுவரெலியாவுக்கு நண்பகல் 1-30 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதே அங்குக் குளிராக இருந்தது. ஆறாயிர அடிக்கு மேலே உள்ள நகரம் நுவரெலியா. அங்கே பெரிய ஏரி, குதிரைப் பந்தய மைதானம், பெரிய கடைகள், வேறு கட்டிடங்கள் எல்லாம் இருக்கின்றன. உல்லாசமாகப் பொழுதைப் போக்கும் மனிதர்களுக்கு நல்ல இடம் அது. எங்களை வரவேற்ற நண்பர் 'புடைவைக் கடை' வைத்திருந்தார். பெண்கள் கட்டும் ஆடைகளை மாத்திரம் விற்கும் இடம் அன்று; ஜவுளிக்கடை அது. எல்லா வகையான ஆடைகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் புடைவை என்று சொல்வார்கள். அந்தக் கடைக்காரரும் யாழ்ப்பாணத்தார். தமிழில் புடைவை என்பதற்குப் பொதுவாக ஆடை என்றுதான் பொருள். திருநாவுக்கரசர் தம் தமக்கையை ஒருவரும் அறியாமல் பார்க்கும் பொருட்டு ஆடையினால் தம்மை மறைத்துக் கொண்டு சென்றார் என்று பெரிய புராணத்தில் ஒரு செய்தி வருகிறது. அங்கே,

"மெய்தருவான் நெறியடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமைஊன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழும்
திருவதிகை சென்றடைவார்"