பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

இலங்கைக் காட்சிகள்

பிறகும் மீட்டும் மீட்டும் செல்ல வேண்டும் என்று ஆர்வம் பூண்டவர்கள் எத்தனை பேர்!

இவ்வளவும் பக்தியினால் விளையும் விளைவுகள்: இறைவனுடைய திருவருட் கூத்தின் பிரபாவம். இவ்வளவு பேர் போய்க் கண்டார்கள் ; காண்கிறார்கள்: இனியும் காண்பார்கள். அவர்கள் அடையும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை. ஆனால், "கதிர் காமத்தின் இரகசியத்தைக் கண்டீர்களா?" என்று கேளுங்கள். "கண்டும் கண்டிலேன் என்ன கண்மாயமே !” என்றுதான் சொல்வார்கள்.