பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வருகிறார்கள் என்பதற்கு இந்தத் துண்டு அறிக்கை மற் றொரு எடுத்துக் காட்டாகும். "The cry for EELAM is Ridiculous and it is time all Singalese united in one Common cause to stamp out for all time This twin cause, the known and unknown Enemies, namely the Tamils and Muslims'. சிங்களவர் ஒன்றுபடுதல்! தமிழர்களையும் முஸ்லீம் களையும் ஒழித்துக் கட்டிப் பூண்டற்றுப் போகச் செய்தல்! இது இலங்கையில் தீட்டப்பட்டுள்ள திட்டம்! இந்தத் திட்டம் நிறைவேற சிங்களவர் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்திடக் கூடாதாம்! அங்கு தவித்திடும் தமிழர்களும், இங்கிருந்து சென்றி டும் தனபதிகளும் மட்டுமே ரத்தம் சிந்தி மாண்டிட வேண் டூமாம்! ஆதிக்கவாதிகளின் பலமுனை ஆக்கிரமிப்புக்களால் தேய்ந்து தேய்ந்து மேலும் தேய்ந்து கொண்டிருக்கும் தமி ழினத்துக்கு விமோசனமே கிடையாதா என்ற கேள்வி, பெருமூச்சுடன் வெளிப்பட்டுக் கண்ணீரால் குளிப்பாட்டப் படுவதை கண்ட பிறகாவது—தூங்கிடும் தமிழன் விழித்துக் கொள்ள மாட்டானா? இந்தக் கேள்வியின் விளைவுதான் இன்று 29.8.81 காலை பத்து மணிக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலா ளர் சீத்தாபதி எம். எல். சி தலைமையில் என். வி. என். சோமு எம். எல். ஏ பொன்னுரங்கம் எம். எல். ஏ புரு டோத்தமன் எம். எல். ஏ, மாணவர் அணிச்செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவிருக்கிற அடையாள மறியல்! அவ்வழி அற வழி! அமைதி வழி! அண்ணா வழி! பிறழோம் என்பதற்கு அடையாளமாக அண்ணா சிலையிலிருந்து அண்ணாசாலை வழியாக! இலங்கையில் தமிழர்கள்மீது விழும் ஒவ்வொரு அடியும் நமது நெஞ்சில் இடியாக விழுகிறது!